பாபநாசம் அருகே போதையில் பெயிண்டை குடித்த தொழிலாளி உயிரிழப்பு

பாபநாசம் அருகே குடி போதையில் மது என்று நினைத்து பெயிண்டை குடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
பாபநாசம் அருகே போதையில் பெயிண்டை குடித்த தொழிலாளி உயிரிழப்பு
Published on

பாபநாசம்:

பாபநாசம் வங்காரம் பேட்டை கீழவழிநடப்பு தெருவில் வசித்து வந்தவர் குமார் (வயது51). பெயிண்டர். இவர் குடிபழக்கம் உள்ளவர். அவர் சம்பவத்தன்று குடிபோதையில் மது என்று நினைத்து பெயிண்டை எடுத்து குடித்து விட்டார். 

அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். 

இதுபற்றிய புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com