மகளிர் உலககோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி முதலில் பந்துவீச்சு

மகளிர் உலககோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் இன்று மோதும் இந்திய அணி பந்துவீச்சில் களமிறங்கி உள்ளது.
மகளிர் உலககோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி முதலில் பந்துவீச்சு
Published on

லண்டன்:

இங்கிலாந்தில் நடந்து வரும் 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ‘கிளைமாக்ஸ்’க்கு வந்து விட்டது. மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இதில் இந்தியாவும், முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி பந்துவீசி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com