கருணாஸ், வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டது ஏன்?

புழலில் இருந்து வேலூர் சிறைக்கு கருணாஸ் மாற்றப்பட்டது ஏன் என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. #PuzhalJail #Karunas
கருணாஸ், வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டது ஏன்?
Published on

சென்னை:

முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பை நடத்தி வரும் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. கடந்த 16-ந்தேதி நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் ஆகியோரை மிரட்டும் வகையில் கருணாஸ் பேசினார். நாடார் சமுதாயம் பற்றியும் அவர் விமர்சித்தார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கருணாஸ் மீது வழக்குப் பதிவு செய்த நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று அதிகாலையில் அவரை கைது செய்தனர். பின்னர் எழும்பூரில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறிது நேரத்திலேயே கருணாசை வேலூர் சிறைக்கு அதிரடியாக மாற்றி சிறை நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனையடுத்து புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட கருணாஸ், வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் மாற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

புழலில் இருந்து வேலூர் சிறைக்கு கருணாஸ் மாற்றப்பட்டது ஏன் என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் கருணாஸ் சினிமா மற்றும் அரசியல் துறைகளை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை அடிக்கடி சென்று சந்திப்பார்கள்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால் இந்த சந்திப்பு தொடர்ச்சியாகி கொண்டே இருக்கும் என்றே கூறப்பட்டது. இதனை தொடர்ந்தே கருணாஸ் வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #PuzhalJail #Karunas

X

Maalai Malar
www.maalaimalar.com