

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கான முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டிடிவி தினகரன் இன்று தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார்.
அப்போது, அணிகள் இணைப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது குறித்து அவரிடம் கேட்டபோது, அணிகள் இணைப்பு குறித்து கவலை இல்லை என்றும், நாங்கள்தான் கட்சி என்றும் தெரிவித்தார்.