நாள்தோறும் நொண்டி சாக்கு சொல்ல முடியாது - தோல்வி குறித்து விராட்கோலி கருத்து

ஒவ்வொரு போட்டியிலும் தோல்வி அடைந்துவிட்டு அதற்காக நொண்டிசாக்கு சொல்ல முடியாது என பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #ViratKohli
நாள்தோறும் நொண்டி சாக்கு சொல்ல முடியாது - தோல்வி குறித்து விராட்கோலி கருத்து
Published on

பெங்களூர்:

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சோகம் தொடர்கிறது.

அந்த அணி நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்சிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

பெங்களூர் அணி தொடர்ந்து 6-வது தோல்வியை தழுவியது. இதனால் கேப்டன் கோலி மிகுந்த வேதனை அடைந்துள்ளார். போட்டிக்கு பிறகு அவர் கூறியதாவது:-

160 ரன்கள் குவித்தால் கடும் போட்டியை கொடுக்க முடியும் என்று நினைத்தோம். சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்ததால் 150 ரன் தான் இலக்காக நிர்ணயிக்க முடிந்தது.

2-வது இன்னிங்சில் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் அமையவில்லை. இந்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மையாகும்.

ஒவ்வொரு போட்டியிலும் தோல்வி அடைந்துவிட்டு அதற்கான காரணம் தேடுவதும், அதனை பேசுவதும் முறையானது அல்ல. நாள்தோறும் தோல்விக்கு நொண்டிசாக்கு சொல்ல முடியாது. நாங்கள் சரியாக விளையாடதே தோல்விக்கு காரணம்.

இவ்வாறு கோலி கூறியுள்ளார். #ViratKholi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com