கரூர் பகுதியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் - முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு

கரூர் பகுதியில் திமுக சார்பில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை வகித்து பேசினார். #DMK #SenthilBalaji
கரூர் பகுதியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் - முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு
Published on

வேலாயுதம்பாளைம்:

கரூர் மாவட்டம் நன்செய்புகழுர் ஊராட்சி அரசு பள்ளி, திருக்காடுதுறை ஊராட்சி ஆலமரத்து மேடு பகுதி, கோம்புபாளையம் ஊராட்சி சமுதாயக்கூடம், வேட்டமங்கலம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் கரூர் மாவட்ட தி.மு.க.சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,

கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை வகித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை அ.தி.மு.க. அரசு நடத்தாமல் இருப்பதால் உள்ளாட்சி பகுதிகளில் சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதிகள் சரி செய்யப்படாமல் உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.

மோடி அரசு வந்தவுடன் பெட்ரோல், டீசல், கியாஸ், கேபிள் டி.வி. விலைகள் அதிக அளவு உயர்ந்துவிட்டது. ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எல்லா ஓப்பந்தங்களையும் உறவினருக்கு கொடுத்து மகனையும், மருமகனையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழக அரசு அனைத்து வகையிலும் கொள்ளையடித்து வருகிறது. இன்னும் மூன்று மாதத்தில் புதிய ஆட்சி அமையும். அப்போது தமிழகத்திற்கு விடிவு காலம் வரும்.

வரும் பாராளுமன்ற தேர்தலிலும், 21 சட்டமன்ற தொகுதிக்கு வரும் இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து பேசினார். சிலர் மனு கொடுத்தனர். கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.

கூட்டத்தில் மாநில விவசாய அணிசெயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கந்தசாமி மற்றும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய, பேரூர், கிளை பொருப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். #DMK #SenthilBalaji

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com