உடுமலைப்பேட்டையில் விஜயகாந்த், 5-ந்தேதி ஆர்ப்பாட்டம்

தமிழக அரசை கண்டித்து தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் வரும் 5-ந்தேதி திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
உடுமலைப்பேட்டையில் விஜயகாந்த், 5-ந்தேதி ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை:

தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:-

கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆனைமலை நல்லாறு அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் வரும் 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதில் மாவட்டம், ஒன்றியம் நகரம், பகுதி, பேரூர், ஊராட்சி, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், விவசாயப் பெருமக்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com