

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி எஸ்.எஸ்.அலுவாலியாவுக்கு சமீபத்தில் காய்ச்சல் ஏற்பட்டது. டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், நேற்று அவருக்கு மூச்சுவிடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், உடல்நலம் தேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.