புதுக்கோட்டையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஜி.செங்கொடியான் தலைமையில் நடைபெற்றது.
புதுக்கோட்டையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம்
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அம்மா பேரவை மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.ஜி.செங்கொடியான் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஒ.கே.பி. கார்த்திக் பிரபாகரன், வீரமணி, வீரவெற்றி, பாண்டியன், உமாகணேசன், ஆகியோர் முன்னிலையில் கூட்டத்திற்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராமசுப்பு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

டி.டி.வி.தினகரன் கைதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும். அ.தி.மு.க பொதுச் செயலாளர் வழிக்காட்டுதலில் கட்சியின் சாதி அரசியல் கிடையாது சாதி என்றால் அ.தி.மு.க தான். அ.தி.மு.க கட்சியின் நல்ல தலைமையை டி.டி.வி. தினகரன் மூலமாக தான் நடத்தப்படும். கட்சிக்கு நல்ல தலைமை கிடைத்துள்ளது. கட்சி தலைமைக்கு வலுசேர்க்குவும் ஊன்று துணையாக இருப்போம் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை பாசறை செயலாளர் அருண்குமார், ஒன்றிய அம்மா பேரவை சக்திவேல், புதுக்கோட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர் அப்பாதுரை, குமார்,செந்தில், சுரேஷ் மலையூர்ராஜா மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஒன்றியத்தில் உள்ள கந்தர்வ க்கோட்டை, விராலிமலை, கறம்பக்குடி, அறத்தாங்கி, மணல்மேடுக்குடி, திருமயம், பொண்ணமராவதி, ஆலங்குடி பகுதிகளிலிருந்து பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com