இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது, தினகரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிபதி அனுமதி வழங்கினார்.

தினகரனை 5 நாட்கள் காவலில் எடுத்த போலீசார், விசாரணைக்காக கடந்த வியாழக்கிழமை சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்யைில் வைத்து அவரிடம் மூன்று நாட்களாக விசாரணை நடந்தது. அதன்பின் சனிக்கிழமை (29-ந்தேதி) மாலை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே டி.டி.வி.தினகரனுக்கு வழங்கப்பட்டுள்ள 5 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது மே 15-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.