பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார் தினகரன்

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், சென்னை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தினகரன் சந்தித்து பேசினார். #TTVDhinakaran #Sasikala
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்தார் தினகரன்
Published on

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், சென்னை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தினகரன் சந்தித்து பேசினார்.

தினகரனுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், முருகன், கதிர்காமு, பார்த்திபன், சுப்பிரமணியன், தங்கதுரை, உமாமகேஸ்வரி, மாரியப்பன் கென்னடி, கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோரும் சந்தித்து பேசினர்.

மேலும் சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2 நாள் விசாரணை நடத்திய பிறகு இந்த சந்திப்பு நடைபெறுவதால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏற்கனவே தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் அப்பீல் செய்யமாட்டோம் என்று தினகரன் அறிவித்து இருந்தார். ஆனால் ஒரு சிலர் அப்பீல் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர். இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை எதிர்த்து அப்பீல் செய்வது குறித்து சசிகலாவிடம் தினகரனும், மற்றவர்களும் ஆலோசனை நடத்தி வருவதாக  தெரியவருகிறது.

மேலும் சசிகலா மற்றும் தினகரனை தவிர மற்றவர்களை அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கூறி இருந்தனர். ஆனால் இவர்கள் 2 பேரை சேர்த்தால்தான் நாங்களும் அ.தி.மு.க.வில் இணைவோம் என்று தங்கதமிழ்ச்செல்வன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com