மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் உள்ளது. #panchayatpoll #TrinamoolCongress
மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த14-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்றன. 621 ஜில்லா பரிசித்துகளுக்கும், 6 ஆயிரத்து 123 பஞ்சாயத்து சமிதிகளுக்கும், 31 ஆயிரத்து 802 கிராம பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பல்வேறு வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேடபாளர்கள் 1800 கிராம பஞ்சாயத்துகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

மேலும், பா.ஜ.க. 100 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சி 30 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பாரதிய ஜனதா 100 கிராம பஞ்சாயத்துகளிலும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 30 இடங்களிலும் முன்னிலையில்  உள்ளன. வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருவதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #panchayatpoll #TrinamoolCongress

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com