ஆம்பூர் அருகே ரெயிலில் சிக்கி சிறுவன் உள்பட 3 பேர் பலி

ஆம்பூர் ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு சிறுவன் உள்பட 3 பேர் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம்பூர் அருகே ரெயிலில் சிக்கி சிறுவன் உள்பட 3 பேர் பலி
Published on

ஜோலார்பேட்டை:

ஆம்பூர் அருகே உள்ள கருப்பூரை சேர்ந்தவர் சங்கர் (வயது 40). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது அண்ணன் அனுமுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக சங்கர் அவரது சகோதரி பானுமதி (54). இவரது பேரன் நித்திஷ் (5) ஆகிய 3 பேரும் இன்று காலை சென்னை செல்வதற்காக ஆம்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தனர்.

அப்போது மங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. ரெயில் வருவதை கவனிக்காமல் 3 பேரும் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது வேகமாக வந்த ரெயில் அவர்கள் மீது மோதியது. 3 பேரும் ரெயிலுக்குள் சிக்கினர்.

உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். இதனால் அப்பகுதி ரத்த வெள்ளமாக காட்சியளித்தது. இதனை கண்ட சக பயணிகள் அலறியடித்து ஓடினர்.

இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை உள்பட 3 பேர் உடல் சிதறி இறந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com