ஒருநாள் போட்டியில் அதிவேக சதமடித்த 5 இந்திய வீரர்கள்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதமடித்த 5 இந்திய வீரர்கள் குறித்த பட்டியலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.
யுவராஜ், சேவாக், விராட் கோலி
யுவராஜ், சேவாக், விராட் கோலி
Published on

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பலநூறு சர்வதேச சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அப்படி அடிக்கப்பட்ட சதங்களில் அதிகபட்ச சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் மற்றும் கோலி முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர். இப்படி இருக்கும் இந்த பட்டியலில் அதிவேக சதமடித்த இந்தியவீரர்களை காண்போம்.

விராட்கோலி இந்திய அணியின் கேப்டன் ஆவதற்கு முன்பு மிகவும் அதிரடியாக விளையாடி கொண்டிருந்தார். 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய அவர் 52 பந்துகளில் சதம் விளாசினார். இந்த போட்டியில் இந்திய அணி 360 ரன்களை அடித்து வெற்றி பெற வேண்டியிருந்தது. விராட் கோலி சதத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.

வீரேந்தர் சேவாக் 2009ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாமில்டன் மைதானத்தில் அடித்து பட்டையை கிளப்பினார். இந்த போட்டியில் இவர் 60 பந்துகளில் சதம் விளாசி இருந்தார். இதன்மூலம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த பட்டியலில் மேலும் ஒரு சதத்தை தனக்குள் வைத்திருக்கிறார் விராட்கோலி .52 பந்துகளில் சதமடித்து 14 நாட்கள் தான் ஆகியிருக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 6 ஆவது போட்டியில் இந்த சதம் வந்தது. இந்த போட்டியிலும் இந்திய அணி 300 ரன்களுக்கும் மேலாக அடித்து வெற்றி பெற வேண்டியிருந்தது இதன் காரணமாக 61 பந்துகளில் சதம் விளாசினார் விராட் கோலி.

யுவராஜ் சிங் ராஜ்கோட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 61 பந்துகளில் ருத்ர தாண்டவம் ஆடினார். இதன்மூலம் இந்த பட்டியலில் 61 பந்துகளில் 100 ரன் அடித்து 4- வது இடத்தை பிடித்துள்ளார்.

முகமது அசாருதீன் 1997ஆம் ஆண்டு பரோடா மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 62 பந்துகளில் சதம் விளாசினார். இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆகவும் இருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com