திருவிழாவுக்கு வருவோரெல்லாம் சாமியாக முடியாது - விஜய்க்கு அமைச்சர் பதில்

சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் அரசியல் பேச்சுக்கு, “சினிமா தொழிலை ஒழுங்காக பாருங்கள்” என அமைச்சர் உதயகுமார் பதில் கொடுத்துள்ளார். #Vijay #Udhayakumar #Sarkar
திருவிழாவுக்கு வருவோரெல்லாம் சாமியாக முடியாது - விஜய்க்கு அமைச்சர் பதில்
Published on

மதுரை:

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது விழாவில் பேசிய நடிகர் விஜய், ‘சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. முதலமைச்சரானால் நான் நடிக்க மாட்டேன்’ என்று அதிரடியாகப் பேசினார். மேலும் ‘எல்லாரும் அரசியலில் நின்று ஜெயித்து சர்கார் அமைப்பாங்க. ஆனால் நாங்க சர்கார் அமைத்துவிட்டு தேர்தலில் நிற்க போகிறோம்’ என்றார் . 

விஜயின் இந்த பேச்சு அரசியல் களத்தை பரபரபாக்கியுள்ள நிலையில், பல அரசியல் தலைவர்களும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வரும்நிலையில், அமைச்சர் உதயகுமார்,  ‘சினிமா தொழிலை ஒழுங்காக பாருங்கள். திருவிழாவுக்கு வருவோரெல்லாம், சாமியாக முடியாது. கடவுள் கொடுத்த சினிமா தொழிலை முதலில் ஒழுங்காக பாருங்கள்.’ என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com