ஊரடங்கில் ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள்- 1 நாள் சம்பளம் பிடிக்க உத்தரவு

ஜூலை 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on

சென்னை:

ஜூலை 7ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அரசு உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து சம்பள பிடித்தம் தொடர்பான சமூக நலத்துறை ஆணையரின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் விடுமுறை நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தியதில் தவறில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com