ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டது - வைகோவுக்கு தமிழக அரசு பதில்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டது - வைகோவுக்கு தமிழக அரசு பதில்
Published on

சென்னை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திலும் புகார் அளித்திருந்தார். இதற்கு தமிழக அரசு பதில் அளிக்கும் விதமாக ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் லிவிங்ஸ்டன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தின் நகல் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அந்த கடிதம் விவரம் வருமாறு:-

ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா குழுமத்தினர், தங்களது உரிமத்தைப் புதுப்பிக்கக் கோரி அளித்து இருந்த விண்ணப்பத்தைத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், 9.4.2018 அன்று ஏற்க மறுத்ததுடன், ஆலையை இயக்கக் கூடாது என, 12.04.2018 அன்று ஆணை பிறப்பித்தது.

அதைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைகளையும், மின் இணைப்பைத் துண்டித்தும், 23.05.2018 அன்று அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, 24.05.2018 அன்று, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காக அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு, அதன்படி, 28.05.2018 அன்று ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com