முதலமைச்சர் தாயார் மறைவு- ஆளுநர் இரங்கல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93). சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பு காரணமாக அதிகாலை 1 மணியளவில் காலமானார்.

தகவல் அறிந்து சேலம் புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயம்மாளுக்கு பழனிசாமியுடன் கோவிந்தராஜ் என்ற மகனும் விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள மயானத்தில் முதலமைச்சரின் தாயார் தவுசாயம்மாள் உடல்  தகனம் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com