

சேலம்:
சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா முதல் அஸ்தம்பட்டி வரையிலான சுமார் 2.5 கிலோமீட்டர் தூரம் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
முன்னதாக அவர் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் வடக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் வருகைக்காக சுமார் 7 நிமிடம் காத்திருந்தார். தி.மு.க. எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., ஆகியோர் வந்ததும் அவர் பாலத்தை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.