திருப்பதியில் எடப்பாடி பழனிச்சாமி தரிசனம்

திருப்பதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். #edappadipalaniswami #tirupati
திருப்பதியில் எடப்பாடி பழனிச்சாமி தரிசனம்
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் நேற்று மதியம் சேலத்தில் இருந்து புறப்பட்டு வேலூர் வழியாக கார்மூலம் திருமலைக்கு வந்தார்.

திருப்பதிக்கு வந்த அவரை தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு திருப்பதி ஆர்.டி.ஓ. கனக நரசாரெட்டி, துணை செயல் அலுவலர் பாலாஜி, ஏ.எஸ்.பி. முரளி கிருஷ்ணா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர், ஆந்திர மாநில போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக்கொண்டார். இரவில் வராக சுவாமி ஹயக்ரிவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com