சத்தீஸ்கர் - பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 நக்சல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #Sukma #NaxalEncounter
சத்தீஸ்கர் - பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் 3 நக்சல்கள் சுட்டுக் கொலை
Published on

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 3 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 15க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது என நக்சல் தடுப்பு படையை சேர்ந்த அதிகாரி அவஸ்தி தெரிவித்துள்ளார். #Sukma #NaxalEncounter #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com