தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Published on

கோவை:

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (வயது 65). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கண்ணாடி கடைக்கு சென்றார். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த மின்சார விளம்பர பலகையை தொட்டார். அதில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. இதில் உடல் கருகி உயிருக்கு போராடிய சின்னராஜை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சின்னராஜ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com