தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு 100 சதவீதம் எங்களுக்கு சாதகமாக வரும் - தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை

தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருக்கும் என தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #18MLAsCase #ThangaTamilSelvan
தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு 100 சதவீதம் எங்களுக்கு சாதகமாக வரும் - தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை
Published on

சென்னை:

தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு வழங்க உள்ள இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் நீதிமன்றத்திற்கு வந்தனர். ஒரு சிலர் மட்டும் வரவில்லை.

இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதமைச்சருக்கு எதிராக செயல்பட்டதால் எங்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார். இன்றைய தீர்ப்பு 100 சதவீதம் எங்களுக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் சட்டமன்றம் சென்று ஜனநாயக கடமையாற்றுவோம். அதேசமயம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வராவிட்டால் நான் மேல்முறையீடு செய்யமாட்டேன்.

எங்கள் மீதான தகுதி நீக்கம் உறுதி செய்யப்பட்டு இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆனால் இடைத்தேர்தலில் ஒரு எம்எல்ஏ தோற்றாலும் நாங்கள் 18 பேரும் ராஜினாமா செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார். #18MLAsCase #MLAsDisqualification #MadrasHighCourt #ThangaTamilSelvan

X

Maalai Malar
www.maalaimalar.com