மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டும்: தம்பித்துரை

நீட் தேர்வை தமிழக அரசு ஏற்கவில்லை, மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று ஈரோட்டில் துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார்.
மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டும்: தம்பித்துரை
Published on

ஈரோடு:

ஈரோட்டில் இன்று நடை பெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை நிருபர்களிடம் கூறியதாவது:-

நீட் தேர்வை ஜெயலலிதா ஏற்கவில்லை. அவரது நிலை பாட்டில்தான் அரசும் உள்ளது. எனவே தமிழகத்தை பொறுத்தவரை அமைச்சர்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளவில்லை.

நீட் தேர்வை குஜராத் மாநிலம் ஏற்கவில்லை. மேற்கு வங்காளம், கர்நாடகாவும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதே நிலையில்தான் தமிழக அரசும் உள்ளது. விதி விலக்கு கேட்டிருக்கிறோம்.

எனவே இந்த விசயத்தில் ஒத்த கருத்துள்ள முதல்- அமைச்சர்களுடன் கலந்து பேசி மாற்று ஏற்பாடாக என்ன செய்வது? என்று அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால் தவறான வாக்குறுதிகளை கொடுக்க நாங்கள் விரும்பவில்லை.

தற்போது வந்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புதான் திடீர் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் பிரச்சினைகளை உணர்ந்து அரசு செயல்படுகிறது.

எனவே மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டும். இவ்வாறு துணை சபாநாயகர் தம்பித்துரை கூறினார்.

முன்னதாக அவர் எம். ஜி.ஆர். புகைப்பட கண்காட் சியை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் செங்கோட் டையன், ஓ.எஸ் மணியன், கடம்பூர் ராஜூ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com