

சென்னை:
அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், செய்தி தொடர்பாளருமான முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ் நாட்டில் அமைச்சராக இருப்பதற்கான தகுதியே இல்லாத முதல் நபர் அன்பரசன். அமைச்சர் பதவியில் பிழைக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் மந்திரி அன்பரசனுக்கு நாவடக்கம் வேண்டும்.
அண்ணாவின் பெயரால் புரட்சித் தலைவர் இயக்கம் கண்டபோதும் சரி, அவருக்குப் பின்னால் இந்த இயக்கத்தை அம்மா வழிநடத்திய போதும் சரி, கருணாநிதி எத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தாரோ, அதையே இப்போது ஸ்டாலினின் தொண்டரடிப் பொடி யாழ்வார்கள் கையில் எடுத்திருப்பது, அவர்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும். மல்லாந்து படுத்து எச்சில் துப்பும் வேலையை அன்பரசன் இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.