தஞ்சை மாவட்டத்தில் என்ஐஏ சோதனை- உபா சட்டத்தின் கீழ் இருவர் கைது

கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.153பி, 121ஏ, 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு.
தஞ்சை மாவட்டத்தில் என்ஐஏ சோதனை- உபா சட்டத்தின் கீழ் இருவர் கைது
Published on

தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், சாலியமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான் மற்றும் அப்துல் ரகுமான் என்ற இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீது உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

153பி, 121ஏ, 120 பி உள்ளிட்ட பிரிவுகளில் என்ஐஏ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com