'கலைஞர் 100' நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றது முதல் 2019 வரை வெளியான கட்டுரை தொகுப்பு நூலாக வெளியீடு. 'கலைஞர் 100' நூலை முதலமைச்சர் வெளியிட முதல் பிரதியை கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்.
'கலைஞர் 100' நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
Published on

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு தமிழ் நாடு முழுக்க கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொண்டாட்டத்தின் அங்கமாக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டும், சிறப்பு நிகழ்ச்சிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று "கலைஞர் 100" நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு "கலைஞர் 100" புத்தகத்தை வெளியிட, அதனை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார்.

கலைஞர் 100 நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com