நீலகிரி முன்னாள் பா.ஜ.க எம்.பி மாஸ்டர் மாதன் காலமானார்

வாஜ்பாய் பிரதமராக இருந்த 98-ம் ஆண்டும் இவர் நீலகிரி எம்.பியாக இருந்தார்.தமிழக பா.ஜ.கவின் துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
மாஸ்டர் மாதன்
Published on

கவுண்டம்பாளையம்:

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி பாலாஜி கார்டனில் வசித்து வந்தவர் மாஸ்டர் மாதன்(வயது93).

இவர் அண்மைக்காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, அதற்காக வீட்டில் இருந்தபடி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 11.10 மணிக்கு வீட்டில் இருந்த மாஸ்டர் மாதன் காலமானார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் இன்று காலை அவரது வீட்டிற்கு வந்தனர்.

அங்கு வைக்கப்பட்டிருந்த மாஸ்டர் மாதன் உடலுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மாஸ்டர் மாதன் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் 98 மற்றும் 99-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2 முறை எம்பியாக பதவி வகித்துள்ளார். இதில் வாஜ்பாய் பிரதமராக இருந்த 98-ம் ஆண்டும் இவர் நீலகிரி எம்.பியாக இருந்தார்.

அதுமட்டுமின்றி தமிழக பா.ஜ.கவின் துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

மாஸ்டர் மாதனுக்கு சரஸ்வதி அம்மாள் என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com