தருமபுரி நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆஜர்

நீதிமன்றத்தில் ஆஜரானவர்களிடம் நீதிபதி கேள்விகளை கேட்டார். வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
தருமபுரி நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆஜர்
Published on

தருமபுரி:

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதற்காக அவர் மீது 10 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையினை தருமபுரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இன்று 2 வது முறையாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், தனபால் உள்ளிட்ட 11 பேரும் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானர். அவர்களிடம் சில கேள்விகளை நீதிபதி கேட்டார்.

பின்னர் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com