பாராளுமன்ற தேர்தலோடு பிரதமர் காணாமல் போய்விடுவார்

பாராளுமன்ற தேர்தலோடு பிரதமர் காணாமல் போய்விடுவார்திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை.
பாராளுமன்ற தேர்தலோடு பிரதமர் காணாமல் போய்விடுவார்
Published on

ஈரோடு:

ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் யார் கண்டிப்பாக தோற்பார்களோ அவர்களது பட்டியலை வேட்பாளர்கள் பட்டியலாக பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

தமிழகத்திற்கு தொடர்ந்து பிரதமர் மோடி வந்து செல்வது, நமது ஊரின் சாம்பார் அதிகம் பிடிப்பதால் தான் என நினைக்கிறேன். திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி இல்லை. சுமூகமாக தான் நடக்கிறது. இரண்டொரு நாளில் எந்தெந்த தொகுதி போட்டியிடுகிறோம் என்று வெளியிடப்படும்.

பிரதமர் மோடி இந்த தேர்தலுடன் காங்கிரஸ் காணாமல் போய்விடும் என சொல்கிறார். கண்டிப்பாக நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு, மோடியை எங்கு தேடினாலும் இருக்க மாட்டார். காணாமல் போய்விடுவார்.

தமிழகத்தில் என் மண், என் மக்கள் வெற்றியடைந்துள்ளதாக பிரதமர் கூறி வருகிறார். தமிழகமே அவர்களது சொந்த பூமி என்று நினைத்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து பணத்தையோ, நிதியையோ, வரியையோ, தமிழகத்தின் வளர்ச்சிக்கு கொடுக்கலாம் என்றில்லாமல், அதனை அவர்கள் சுருட்டி கொண்டுள்ளார்கள்.

விஜயதாரணி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வெளியேறுவது, சில கெட்ட மற்றும் மோசமான சக்திகள் காங்கிரஸ் கட்சியினை தூய்மைப்படுத்த வெளியேறி உள்ளனர்.

அவர்களுக்கு எங்களது நன்றி. தமிழகத்தில் கஞ்சாவை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுக்கிறது. அதில், தப்பு தண்டாவில் ஈடுபடுகிறவர்கள் பிடிக்கப்படுகிறார்கள். இதில் ஆளும் கட்சியினர் ஈடுபடுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வில் எத்தனை சமூக விரோதிகள் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்ற பட்டியலை எடுத்தீர்கள் என்று சொன்னால், தமிழ்நாட்டில் பா.ஜ.க.விற்கு பிறகு அதிகமான குற்றவாளிகள் இருப்பது எடப்பாடியோடு தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com