திருவான்மியூர்-அக்கரை வரை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்கு கட்டிடங்கள் இடிப்பு

கட்டிடங்கள் அகற்றப்பட்ட இடங்களில் சாலையோரம் உள்ள மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மார்கள் அகற்றப்பட உள்ளது.கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக விரிவு படுத்தப்பட உள்ளது.
திருவான்மியூர்-அக்கரை வரை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்கு கட்டிடங்கள் இடிப்பு
Published on

வேளச்சேரி:

சென்னை கிழக்கு கடற்கரை சாலை 6 வழி சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இதில் திருவான்மியூரில் இருந்து அக்கரை வரையிலான கிழக்கு கடற்கரை சாலையை (இ.சி.ஆர்.) அகலப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி சாலையோரம் இருந்த ஏராளமான வீடுகள், கடைகள், கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன.

இதே போல் கொட்டிவாக்கம், பாலவாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் சாலையேரங்களில் உள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி வருகிறார்கள்.

கட்டிடங்கள் அகற்றப்பட்ட இடங்களில் சாலையோரம் உள்ள மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மார்கள் அகற்றப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு உள்ளது. இந்த டெண்டர் ஒதுக்கியதும் 3 மாதத்தில் இந்த பணி முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக விரிவு படுத்தப்பட உள்ளது. இதற்கு நிலம் கையகப்படுத்துவது நீண்ட காலமாக நீடித்தது. ஏனெனில் அதிக நிலங்கள் கையகப்படுத்த வேண்டி இருந்தது.

கட்டிடங்கள் அகற்றப்பட்டதும் ஒப்பந்ததாரர்கள் மூலம் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும். தற்போது கட்டிடங்கள் அகற்றப்பட்ட இடங்களில் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகின்றன. சாலையோரத்தில் உள்ள மரங்களும் அகற்றப்படும்.

கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி முதலில் முடிக்கப்படும் என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com