காயிதே மில்லத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. காயிதே மில்லத் அவர்களது பிறந்தநாளான இன்று, அவரது தொண்டினை நினைவுகூர்வோம்!
காயிதே மில்லத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
Published on

சென்னை:

கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 129-வது பிறந்தநாள் இன்று. இதையடுத்து திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, சாமிநாதன், சேகர்பாபு, சிவி கணேசன், மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

அன்னைத் தமிழ்மொழிக்காகவும் - இஸ்லாமியச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும் - மதநல்லிண்ணக்கம் நம் மண்ணில் தழைத்தோங்கவும் உழைத்த கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களது பிறந்தநாளான இன்று, அவரது தொண்டினை நினைவுகூர்வோம்! என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com