தமிழ்த்தாய் வாழ்த்து: பிரதமரிடம் முதல்வர் கெஞ்சியிருப்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது - அப்பாவு

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது குறித்து பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை.
தமிழ்த்தாய் வாழ்த்து: பிரதமரிடம் முதல்வர் கெஞ்சியிருப்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது - அப்பாவு
Published on

தமிழ்நாடு அரசுக்கு இருக்கும் உரிமையை பயன்படுத்த பிரதமரிடம் அனுமதி கேட்பது மாநில உரிமையை அடமானம் வைக்கும் செயல் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது குறித்து பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்த நிலையில் விமர்சித்துள்ளார்.

மேலும் கூறிய அவர்,"தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்க பிரதமரிடம் முதல்வர் கெஞ்சியிருப்பது மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரானது.

சுதந்திரத்தை கொடுக்கவும் முடியாது வாங்கவும் கூடாது, அது நமது உரிமை என கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com