NEET மறு தேர்வு: திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்டங்களில் தேர்வை புறக்கணித்த மாணவர்கள்!

மீண்டும் மன அழுத்தத்தை சந்திக்க விரும்பவில்லை" போன்ற காரணங்களால் மறு தேர்வை தவிர்த்ததாக கூறப்படுகிறது.
students avoided  NEET Re-exam
Published on

திருச்சி, தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மத்திய தமிழக மாவட்டங்களில் நடைபெற்ற NEET-UG 2026 மறு தேர்வில் மாணவர்கள் வருகை கணிசமாக குறைந்துள்ளது. முதன்மைத் தேர்வில் எழுதிய பல மாணவர்கள், மீண்டும் தேர்வு எழுதுவதில் ஆர்வம் காட்டாததால் வருகை சதவீதம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் பலர், "முதல் தேர்வின் மதிப்பெண் போதுமானதாக இருக்கும்", "மீண்டும் மன அழுத்தத்தை சந்திக்க விரும்பவில்லை" போன்ற காரணங்களால் மறு தேர்வை தவிர்த்ததாக கூறப்படுகிறது. மேலும், தேர்வு கடினமாக இருக்கும் என்ற அச்சமும் வருகை குறைவதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

மறு தேர்வை எழுதிய மாணவர்கள் கூறுகையில், இயற்பியல் மற்றும் வேதியியல் பகுதிகள் முதல் தேர்வைவிட மிகவும் கடினமாகவும், நீளமான வினாக்களுடனும் இருந்ததாக தெரிவித்தனர். குறிப்பாக இயற்பியல் வினாக்கள் அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

தேசிய தேர்வு முகமை நாடு முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மறு தேர்வை நடத்தியது. உயிர்முறை சரிபார்ப்பு, சிசிடிவி கண்காணிப்பு, இரு கட்ட சோதனை, காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நாடு முழுவதும் நடைபெற்ற மறு தேர்வில் பெரும்பாலான மாநிலங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வருகை பதிவாகியிருந்தாலும், தமிழகத்தின் சில பகுதிகளில் மாணவர்கள் கணிசமான அளவில் தேர்வை புறக்கணித்தது குறித்து கேள்விகள் எழுந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com