சண்முகநாதன் கனகவள்ளி அறக்கட்டளை இலவச நீட் பயிற்சி மையத்தில் படித்த 6 பேருக்கு மருத்துவ இடம்

சண்முகநாதன் கனகவள்ளி அறக்கட்டளை நீட் மையம் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
சண்முகநாதன் கனகவள்ளி அறக்கட்டளை இலவச நீட் பயிற்சி மையம்
சண்முகநாதன் கனகவள்ளி அறக்கட்டளை இலவச நீட் பயிற்சி மையம்
Published on

சண்முகநாதன் கனகவள்ளி அறக்கட்டளை சேலம் மாவட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடியில் மாணவர்களுக்காக ஒரு இலவச நீட் (NEET) பயிற்சி மையத்தை நடத்தி வருகிறது. பயிற்சி பெறுவதில் தடைகளை எதிர்கொள்ளும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

கங்கா ஹாஸ்பிடல்ஸ் (Ganga Hospitals) நிறுவனத்தால் 2024-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இம்மையம், அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்புகள், பாடக் குறிப்புகள், வழிகாட்டுதல் மற்றும் தங்கும் வசதி ஆகியவற்றை அவர்களின் குடும்பங்களுக்கு எவ்விதச் செலவுமின்றி வழங்குகிறது.

திருமதி காயத்ரி, டாக்டர் சண்முகநாதன் மற்றும் திருமதி கனகவள்ளி ஆகியோரின் பேத்தி ஆவார். சண்முகநாதன்- கனகவள்ளி பேத்தியான Curi மருத்துவமனை நிர்வாக இயக்குநர் திருமதி காயத்ரி 2024-ம் ஆண்டில் சண்முகநாதன் கனகவள்ளி அறக்கட்டளையின் இலவச நீட் (NEET) பயிற்சி மையத்தை தொடங்கினார்.

இந்த அறக்கட்டளை பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் 6 பேருக்கு தற்போது நடைபெற்று வரும் மருத்துவ படிப்பிற்கான கவுன்சிலிங்கில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்பில் இடம் கிடைத்துள்ளது.

நீட்டில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புக்கான இடம் கிடைப்பது குறித்து காயத்ரி கூறுகையில் "மற்ற தொழில்களுடன் ஒப்பிடுகையில், உங்கள் பிள்ளை மருத்துவராவதில் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. குறிப்பாக, அவர்கள் தங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரியாக இருக்கும்போது அந்தச் சிறப்பு இன்னும் அதிகமாகிறது.

என் பையன் அல்லது பொண்ணு டாக்டர் என்று சொல்வதில், அந்த வார்த்தைகளின் நேரடிப் பொருளைத் தாண்டி ஆழமான அர்த்தங்கள் பொதிந்துள்ளன. அது ஒரு அமைதியான மரியாதை, கண்ணியம் மற்றும் வேலைக்கான உத்தரவாதம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அக்குடும்பத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும் அது உருவாக்கித் தரும் வாழ்க்கைப்பாதை, தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவை மிகச் சிறப்பானவை.

பல மாணவர்களுக்கு, வகுப்பறைக்குச் செல்வதே ஒரு தினசரித் தடையாக இருந்தது. சிலர் வகுப்பிற்குச் செல்ல ஒவ்வொரு முறையும் இரண்டு மணி நேரம் பயணம் செய்துவிட்டு, பின்னர் வீட்டிற்குத் திரும்பி, இரவில் படிப்பதற்கு முன்பு வீட்டிலும் வயலிலும் சிறுசிறு வேலைகளைச் செய்தனர். இந்தத் தடைகள் பெரும்பாலும் உந்துதல் அல்லது ஆர்வத்தைப் பற்றியதாக இல்லை, மாறாக அணுகல் தொடர்பானவையே இருந்தது. அருகில் பயிற்சி மையம் இல்லை, பயிற்சி கட்டணம் செலுத்த வழியில்லை. தமிழில் வாசிப்பு பொருட்களுக்குப் பற்றாக்குறை. குறிப்பாகப் பெண் பிள்ளைகளுக்குத் தொடர்ந்து முயற்சி செய்வதற்கான ஊக்கமின்மை. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, மையம் தனது பெண் மாணவர்களுக்காக ஒரு தங்கும் விடுதி வசதியை அமைத்தது.

சண்முகநாதன் கனகவள்ளி அறக்கட்டளை இலவச நீட் பயிற்சி மையம்
சண்முகநாதன் கனகவள்ளி அறக்கட்டளை இலவச நீட் பயிற்சி மையம்

கற்பித்தல் முறையானது, ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிராமல், ஒவ்வொரு மாணவரையும் மையமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. நாங்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றை மட்டும் கற்பிக்கவில்லை. நாங்கள் கற்பித்துக் கொண்டும், வாழ்க்கைப் பாடங்கள் வெளிப்படுவதைக் கண்டுகொண்டும் இருந்தோம்.

ஒவ்வொரு மாணவரையும், அவர்களின் அச்சங்கள் மற்றும் கற்றல் இடைவெளிகளையும் புரிந்துகொண்டு, அவர்கள் தமிழ் அல்லது ஆங்கில வழிக் கல்வியில் பயின்றாலும் சரி, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வாசிப்புத் திட்டத்தை வடிவமைக்க ஆசிரியர்கள் தங்கள் முழு முயற்சியையும் மேற்கொள்கின்றனர்.

வாராந்திரத் தேர்வுகள், விடைத்தாள் குறித்த கலந்துரையாடல்கள், புதன்கிழமை மாலை நேர காணொளிச் சந்திப்புகள், பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள் மற்றும் நிலையான தினசரி கால அட்டவணை போன்றவை மையத்தின் செயல்பாட்டு நடைமுறையாக இருந்தது.

மகுடஞ்சாவடியில் உள்ள வகுப்பறைகளிலிருந்து மருத்துவக் கல்லூரிகளின் வளாகங்கள் வரை நீளும் இவர்களின் பயணத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்" என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com