ரெயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: 3 பேருக்கு மீண்டும் சம்மன்- சிபிசிஐடி முடிவு

சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதான 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.நேற்று சுமார் 9 மணி நேரமாக சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடந்தினர்.
ரெயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: 3 பேருக்கு மீண்டும் சம்மன்- சிபிசிஐடி முடிவு
Published on

சென்னை:

பா.ஜ.க. நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சென்னையில் இருந்து ரூ.4 கோடி கடந்த மாதம் 26-ந் தேதி நெல்லைக்கு கொண்டு சென்றபோது தாம்பரத்தில் சிக்கியது.

பணத்தை ரெயிலில் கொண்டு சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் மீது தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கு தாம்பரம் போலீசாரிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. வழக்கு ஆவணங்கள் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதான 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் 3 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியது. அவர்கள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகினர்.

நேற்று சுமார் 9 மணி நேரமாக சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடந்த நிலையில், மீண்டும் சம்மன் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

3 பேரின் வாக்குமூலத்தை குறுக்கு விசாரணை செய்த பின்பு மீண்டும் விசாரணைக்கு அழைக்க உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்தனர்.

செல்போன் உரையாடல்களை கைப்பற்றி இருப்பதால் அது தொடர்பாகவும் மீண்டும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

இவர்களிடம் பணத்தை கொடுத்தது யார்? நெல்லையில் யாரிடம் பணத்தை கொடுக்க சென்றனர் என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்றது.

3 பேரின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com