பொங்கல் பரிசு தொகுப்பை இதுவரை வாங்காதவர்கள் பெற்றுக் கொள்ளலாம்- அதிகாரி தகவல்

சுமார் 70 சதவீத மக்கள் ரேசனில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டனர். சிலர் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ரேசனில் பொருள் வாங்காமல் உள்ளனர்.
பொங்கல் பரிசு தொகுப்பை இதுவரை வாங்காதவர்கள் பெற்றுக் கொள்ளலாம்- அதிகாரி தகவல்
Published on

சென்னை:

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ரேசன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தது. இலவச வேட்டி-சேலைகளும் ரேசனில் வழங்கப்படுகிறது.

கடந்த 9-ந் தேதி முதல் இவை வழங்கப்பட்டு வந்தது. சுமார் 70 சதவீத மக்கள் ரேசனில் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கி விட்டனர். சிலர் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ரேசனில் பொருள் வாங்காமல் உள்ளனர்.

இது குறித்து கூட்டுறவுத்துறை உயர் அதிகாரி கூறுகையில், "விடுமுறை முடிந்து வந்தாலும் ரேசனில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குமாறு உத்தரவிட்டுள்ளோம். எனவே பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காத பொதுமக்கள் ரேசன் கடைக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com