நான் முதல்வன் திட்டத்தால் 92%க்கும் அதிக மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தனர் - முதல்வர் ஸ்டாலின்

40 ஆயிரத்து 148 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார். ரூ.417.21 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
நான் முதல்வன் திட்டத்தால் 92%க்கும் அதிக மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தனர் - முதல்வர் ஸ்டாலின்
Published on

விருதுநகர் சாத்தூர் சாலையில் உள்ள பட்டம்புதூரில் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்த கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 40 ஆயிரத்து 148 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கினார்.

மேலும் 16 ஆயிரத்து 852 பேருக்கு மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 57 ஆயிரத்து 556 பயனாளிகளுக்கு ரூ.417.21 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது, "விருதுநகருக்கு மருது சகோதரர்கள் போல் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ஆகியோர் உள்ளனர். நம் மாநிலத்திறஅகு தமிழ்நாடு என பெயர் சூட்டுவதற்கு உயிரை நீத்தவர் சங்கரலிங்கனார். அண்ணாவை உருவாக்கியது காஞ்சி, கலைஞரை உருவாக்கியது திருவாரூர், காமராஜருக்கு விருதுநகர்."

"என் திருமணத்திற்கு பெருந்தலைவவர் காமராஜர் வந்ததை மறக்கவே முடியாது. காமராஜரின் இறுதிச் சடங்கை ஒரு மகன் போல் இருந்து நடத்தியவர் கலைஞர் கருணாநிதி. காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர் கருணாநிதி."

"விருதுநகரில் நான் முதல்வன் திட்டத்தால் 92 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களால் விருதுநகரில் அதிக அளவில் உயர்கல்வி சேர்க்கை நடைபெற்றுள்ளது," என்று பேசினார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com