இஸ்ரேல்- ஈரான் பதற்றம்: உதவி எண்களை அறிவித்த தமிழக அரசு

தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.
இஸ்ரேல்- ஈரான் பதற்றம்: உதவி எண்களை அறிவித்த தமிழக அரசு
Published on

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் நிலவிவரும் சூழலில் இரு நாடுகளிலும் வசிக்கும் தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்ட திட்டம்

தமிழர்களின் விவரங்களை பெற்று உடனடியாக அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஈரான், இஸ்ரேல் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.

மேலும், உதவி தொடர்பாக 011 24193300 (Land line) 9289516712 (Mobile Number with Whatsapp) என்ற எண்களை அழைக்கலாம் தமிழ்நாடு அரசு

X

Maalai Malar
www.maalaimalar.com