திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற எச்.ராஜாவை தடுத்து நிறுத்திய போலீசார்

இந்து அமைப்பினர் ஒன்றுகூடி போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.திருப்பரங்குன்றம் சுற்றி நேற்று முதல் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற எச்.ராஜாவை தடுத்து நிறுத்திய போலீசார்
Published on

காரைக்குடி:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவு அருந்தியதாக எழுந்த சர்ச்சையால் மலையைப் பாதுகாப்போம் என இந்து அமைப்பினர் ஒன்றுகூடி இன்று போராட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இதற்கிடையே, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றி நேற்று முதலே மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்து, திருப்பரங்குன்றம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் செல்வதற்காக தனது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட்ட பாஜக மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட பாஜக தலைவர் எச்.ராஜாவை போலீசார் அவரது வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

மலையைச் சுற்றி 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்லும் வழியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com