என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் நாளை விடுமுறையா?- அரசு விளக்கம்
- கடந்த 26-6-2025 அன்று மொகரம் மாத பிறை காயல்பட்டினத்தில் காணப்பட்டது.
- தவறான தகவலை பரப்பாதீர்.
சென்னை:
மொகரம் பண்டிகையை முன்னிட்டு 7-ந் தேதி (நாளை) அரசு விடுமுறை என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டு வருகிறது. இது, வதந்தி என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
"கடந்த 26-6-2025 அன்று மொகரம் மாத பிறை காயல்பட்டினத்தில் காணப்பட்டது. ஆகையால் 27-6-2025 தேதி அன்று மொகரம் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனவே யொமே ஷஹாதத் ஞாயிற்றுக்கிழமை 6-7-2025 ஆகும்" என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அந்த தினம் அறிவிக்கப்பட்டுள்ளதால் 7-ந் தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறை இல்லை. தவறான தகவலை பரப்பாதீர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story