

அதிமுகவில் தொடரலாமா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விராலிமலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யலாமா என்பது குறித்து ஆதரவாளர்களிடம் சி.விஜயபாஸ்கர் கேட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமி இல்லம் சென்றபோது முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செல்லவில்லை.
ஆதரவாளர்களிடம் கருத்தை கேட்ட பின்னர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இறுதி முடிவை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.