திமுக அரசின் ஒப்பந்தத்தால் ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு- அமைச்சர் நிர்மல் குமார்

மின்கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்திக்கொள்ள திமுக ஆட்சியில் ஒப்பந்தமாகியுள்ளது.
Minister Nirmal Kumar
Published on

தமிழகத்தில் மின்தடை அதிகரித்துள்ள சூழலில் சென்னை தலைமை செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:

* தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு ஆண்டுதோறும் வழக்கமான ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது.

* மின்கட்டணத்தை ஆண்டுக்கு 6% உயர்த்திக்கொள்ள திமுக ஆட்சியில் ஒப்பந்தமாகியுள்ளது.

* திமுக அரசின் இந்த ஒப்பந்தத்தால் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணத்தை உயர்த்தி வருகிறது.

* பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முதலமைச்சர் விஜய் இதுகுறித்து பரிசீலித்து விரைவில் அதற்கான முடிவுகளை வெளியிடுவார் என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com