சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு- அ.தி.மு.கவினர் வெளிநடப்பு

சட்டம் ஒழுங்கு குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு- அ.தி.மு.கவினர் வெளிநடப்பு
Published on

தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல்கள் தொடங்கின. அப்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

தொடர்ந்து, சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது, நீட் தேர்வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய வரும் 9-ந்தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

இந்நிலையில், சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்

சட்டம ஒழுங்கு குறித்து பேச அதிமுக எம்எல்ஏக்கள் அனுமதி கேட்டனர். ஆனால், சட்டம் ஒழுங்கு குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுக்கப்பட்டதாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து கோஷங்களை எழுப்பு தங்களை எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com