அமோனியா வாயு கசிவு: உயரிழந்தோர் எண்ணிக்கை 16-ஆக உயர்வு

தொழிற்சாலையில் வேதிப்பொருள் விபத்து நிகழ்ந்தது.
Hospital
Published on

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கடல் உணவு பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி செய்யும் நிலையத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்தது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பெரியபாளையத்திற்கு அருகிலுள்ள கன்னிகைப்பேர்/மஞ்சங்கரணை பகுதியில் அமைந்துள்ள இந்த ஏற்றுமதி நிலையத்தில், ஜூன் 21-ஆம் தேதியன்று வழக்கமான பணிகளின் போது இந்த தொழிற்சாலையில் வேதிப்பொருள் விபத்து நிகழ்ந்தது.

தீவிர சிகிச்சை:

நச்சு வாயுவை சுவாசித்ததால் மொத்தம் 83 பேர் பாதிக்கப்பட்டனர்; அவர்கள் மூச்சுத் திணறல், கடுமையான சுவாச கோளாறு, இருமல் மற்றும் நெஞ்சுப் பகுதியில் அசௌகரியம் ஆகிய பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.

இதுவரை 16 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 25 தொழிலாளர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அந்த அறிவிப்பு தெரிவித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com