அமோனியா வாயு கசிவு: உயரிழந்தோர் எண்ணிக்கை 16-ஆக உயர்வு

தொழிற்சாலையில் வேதிப்பொருள் விபத்து நிகழ்ந்தது.
Hospital
Published on

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கடல் உணவு பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி செய்யும் நிலையத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்தது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பெரியபாளையத்திற்கு அருகிலுள்ள கன்னிகைப்பேர்/மஞ்சங்கரணை பகுதியில் அமைந்துள்ள இந்த ஏற்றுமதி நிலையத்தில், ஜூன் 21-ஆம் தேதியன்று வழக்கமான பணிகளின் போது இந்த தொழிற்சாலையில் வேதிப்பொருள் விபத்து நிகழ்ந்தது.

தீவிர சிகிச்சை:

நச்சு வாயுவை சுவாசித்ததால் மொத்தம் 83 பேர் பாதிக்கப்பட்டனர்; அவர்கள் மூச்சுத் திணறல், கடுமையான சுவாச கோளாறு, இருமல் மற்றும் நெஞ்சுப் பகுதியில் அசௌகரியம் ஆகிய பாதிப்புகளுக்கு உள்ளாகினர்.

இதுவரை 16 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 25 தொழிலாளர்கள் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அந்த அறிவிப்பு தெரிவித்தது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com