கோவையில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு: பாலியல் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில், அழுகிய சடலமாக கிடந்தது கண்டறியப்பட்டது.
Crime
Published on

கோவை புதூர் மேற்கு புறவழிச்சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு அருகேயுள்ள ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில், இன்று காலை இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

கோவை புதூர் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள காட்டுப் பகுதி உள்ளது. அந்த வழியில் சென்றவர்கள் ஏதோ சந்தேகத்திற்குட்பட்டு குனியமுத்தூர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண நிலையில், அழுகிய சடலமாகக் கிடந்ததைக் கண்டறிந்தனர்.

சிதைந்த முகம் - அடையாளம் காண்பதில் சிக்கல்..

மீட்கப்பட்ட பெண்ணின் முகம் முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுவதால், அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரங்களை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை.

அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற பலத்த சந்தேகமும் எழுந்துள்ளது.

தீவிரமடையும் போலீஸ் விசாரணை..

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு கிடைத்த முக்கிய ஆதாரங்கள் மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காகவும், பாலியல் வன்கொடுமை ஏதேனும் நடந்துள்ளதா என்பதை மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தவும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குனியமுத்தூர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர். கடந்த சில தினங்களில் கோவையில் மாயமான பெண்களின் விபரங்களை வைத்து போலீசார் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com