

ரூ.134.83 கோடி மதிப்பில் குறுவை சிறப்பு சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* உழவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ரூ.134.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* டெல்டா மாவட்டங்களுக்கு ரூ.77.50 கோடி, டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு ரூ.57.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* விவசாயிகளுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் நாளொன்றுக்கு 18 மணி நேரம் வழங்கப்படும்.
* குறுவை சாகுபடிக்கு 10,714 மெட்ரிக் டன் நெல் விதைகள், 4.02 லட்சம் மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.