

தமிழ்நாட்டில் சமூக நீதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி அளித்த பேட்டியின்போது கூறியதாவது:
* எம்ஜிஆர் தொடங்கி அனைத்து முதல்வர்களிடமும் கோரிக்கை வைத்தோம். விஜய் தான் அதை நடத்திக்காட்ட உள்ளார்.
* இது ஒரு சாதியின் பிரச்சனை இல்லை. தமிழகத்தின் சமூகநீதி பிரச்சனை.
* சமூகநீதி சர்வே எடுத்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வளரும்.
* 69 சதவீத இடஒதுக்கீட்டை காக்க நவீன தரவுகள் தேவைப்படுவதால் சமூக நீதி கணக்கெடுப்பு அவசியம்.
* சமூக நீதி கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு மைல்கல்.
* சமூக நீதி சர்வே எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட இந்த நாள் தமிழ்நாட்டிற்கான பொன்நாள்.
இவ்வாறு அவர் கூறினார்.