வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடை கொடுப்பதற்கு இந்த அரசுக்கு மனமில்லை- அன்புமணி ராமதாஸ்

40 ஆண்டு காலமாக மருத்துவர் ராமதாஸ் இந்த மக்களின் நலனுக்காக பாடுபட்டு வந்தார்.அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் இணைந்து சமூக நீதி என்ற கோட்பாட்டிற்கு ஒன்றிணைய வேண்டும்.
வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீடை கொடுப்பதற்கு இந்த அரசுக்கு மனமில்லை- அன்புமணி ராமதாஸ்
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் 2 நாள் சுற்றுப்ப யணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்துள்ளார்.

இந்நிலையில் தருமபுரி அடுத்த கோம்பை, ஒடசல் பட்டிதூர் உள்ளிட்ட இடங்களில் கட்சிக் கொடி யை ஏற்றி வைத்தார்.

இதனை தொடர்ந்து பொது மக்கள் மத்தியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார் அப்போது அவர் கூறியதாவது: 40 ஆண்டு காலமாக மருத்துவர் ராமதாஸ் இந்த மக்களின் நலனுக்காக பாடுபட்டு வந்தார்.

தற்பொழுது வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் அதை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை ரத்து செய்து ஓராண்டு காலம் ஆகியும், இப்போ துள்ள அரசாங்கம் அதைக் கொடுப்பதற்கு மனமில்லை. அது கிடைக்க வேண்டும் என்ற நோக் கத்தில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அரசிய லுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் இணைந்து சமூக நீதி என்ற கோட்பாட்டிற்கு ஒன்றிணைய வேண்டும்.

இவ்வளவு நாட்கள் நாம் அடிமையாக இருந்து வந்தோம். இப்பொழுது பாட்டாளிகள் ஆளும் நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com