விழாவிற்கு பிறகு பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

நேரு விளையாட்டு அரங்கில் சுமார் அரை மணி நேரம் நீடித்தது.வெள்ள நிவாரணம் தொடர்பாக பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்.
விழாவிற்கு பிறகு பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
Published on

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி, கேலோ போட்டியை தொடங்கி வைத்தார். விழாவின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கேலோ இந்தியா தொடக்க விழாவுக்கு பிறகு பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு நேரு விளையாட்டு அரங்கில் சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், வெள்ள நிவாரணம் தொடர்பாக பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com